Friday, May 16, 2008

8ம் வகுப்பு மாணவியின் ஈழக்கவிதை

நித்தம் பல சத்தம் காணும்
இடமெல்லாம் இரத்தம்!
அதன் காரணம் தான் யுத்தம்
தினம் பல உயிர்கள் பலி-தமிழ்
மனமெங்கும் அழுகை ஒலி-ஈழத்
தமிழனுக்கு என்று தான் விடிவொளி?...
சிங்கள படைகள் செய்தனர் நாசம்!
வெளியில் போட்டனர் பல வேசம்!
ஈழத்தமிழன் மேல் யாருக்கு பாசம்!
உயிர்களை இழந்து
சொந்தங்களை துறந்து
தாய் மண்ணை மறந்து
ஆதரவாய் இங்கே வந்தால்...
அகதியென முத்திரையிட்டு
முகாம்களில் அடைக்கும் உங்களிடம்
அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்...
இங்கே குடியுரிமை-இல்லையெனில்
அங்கே சமாதானம்!..

- வெ.கார்த்திகா,
8 ஆம் வகுப்பு,
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.

No comments: