Wednesday, February 27, 2008

கண்ணியமான காதல்



இனிக்க இனிக்க
தினமும் பேசும்
கண்ணியமான நாம்
இனிய காதல்ஜோடி

இருவரும் இருவருடம்
ஒருவரை ஒருவர் நேரில்
காணாமல் காதலித்த
காலங்கள் இனிமையானவை

இன்று நேரில் சந்திக்கையில்
கன்றை இழந்த தாய்ப்பசு
மறுபடி அதை சந்திக்கையில்
கொள்ளும் சந்தோசத்தை
நான் அடைந்த போதிலும்
தொடமுடியாமல் தடுத்தன
கண்ணியமான நம் காதல்

கையில் மலர்ச்செண்டோடும்
நெஞ்சில் காதலோடும்
என் முன்னே தோன்றிய உனை
கண்டதும் என் கண்கள்
காதலால் கண்ணீர் வடித்தன

வடிந்த கண்ணீரை
துடைத்திட எழுந்த கைகள்
ஏனோ பின் தயங்கின
கண்ணியமான காதலால்

மறுநிமிடம்.....

பூந்தோட்டத்தில் இருந்த நம்மை
மாந்தோப்பில் குலவிய இருகிளிகள்
எம் உதட்டையும் குவிய வைத்து
கண்ணியமான காதலை தோற்கடித்தது

Friday, February 22, 2008

நட்பு

நட்பு
ஜேகேயும் அனிதாவும் உயிர் நபர்கள். இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம் இருந்தபோதும் அன்புகாட்டிக் கொள்வதில் வித்தியாசம் இருந்ததில்லை.

அனிதா கல்வி கற்றுக் கொண்டிருந்தாள்; ஜேகே தனியார் கம்பனி ஒன்றில் நல்ல வேலையில் இருந்தான். அதனால் அனிதாவின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஜேகே பூர்த்தி செய்து வந்தான்.
அனிதா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நட்பில் கோடிஸ்வரியாக இருந்தாள்.

இவர்களின் அன்னியோன்யத்தை பார்த்து பொறாமைப்பட்ட ஜேகேயின் நன்பர்கள்'உன் நட்பை உறுதி செய்ய நீ அவளிடம் ஜ லவ் யூ சொல்ல வேண்டும். அதனை அவள் ஏற்றுக் கொண்டால் உன் நட்பு பொய் என்றும் ஏற்காவிட்டால் உன் நட்பு உண்மை என்றும் ஏற்றுக் கொள்வதாய் சவால் விட்டார்கள். சவாலை சமாளிப்பதில் ஆர்வம் கொண்ட ஜேகே அனிதாவிடம் ஜ லவ் யூ சொல்ல தயாரானான்.

அன்றும் வழமைபோல பாடசாலை விட்டு வந்து கொண்டிருந்த அனிதாவை அழைத்து பேச ஆரம்பித்தான்."அனி.... என்மனசில உள்ளத நா சொல்லலாம்னு நினைக்கிறேன்.ஜ லவ் யூ அனி. நீ எனக்கு வேணும்டா....... "சொல்லி முடிப்பதற்குள் அனிதா அவன் கைகளை உதறிவிட்டு" ஜே நீ இவ்வளவு கேவலமானவனா இருப்பன்னு நா நினைக்கவே இல்ல.என் நட்ப நீ தப்பா புரிந்துகிட்டு இவ்வளவு நாள் என்னை ஏமாற்றியிருக்கா.இனி நா ஏமாறமாட்டேன் குட்பாய் ஜேகே என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களால் வார்த்தைகளை இதயத்தில் இரைத்து விட்டு ஓடி மறைந்தாள்.
தன் நட்பு உண்மையானது என நிருபித்த போதும் நண்பியை பிரிந்து வாடினான். அதன் பின் நடந்த சம்பவத்தை விளக்க பல தடவைகள் ஜேகே முயன்ற பொழுதும் அனிதா ஜேகேயை சந்திப்பதை தவிர்த்தாள். தன்னையும் தன் மனதையும் என்றாவது புரிந்துகொள்வாள் என்ற எதிர்பார்ப்பில் இன்னும் ஜேகே அனிதாவிற்காக காத்திருக்கிறான்....

Sunday, February 17, 2008

தங்கத் தமிழ் மகள் சங்கத்தின் கவி இழை

மின்மினிகள்
வண்ணங்களின் வளைவு நெளிவுகளில்
எண்ணங்களின் தெளிவை பிரதிபலிக்கும்
சாலையோர விளம்பர பலகை ஓவியன்..
உயரமான இடத்தில் போய் வரைந்தாலும்
உயர்வுகாண முடியா வாழ்க்கையில்
வாழ்த்துகள் சிலர் வாயால் கேட்க
சின்ன சின்ன சந்தோசம்..

உழைப்பையே பெரிதும் நம்பி
உழவையே தொழிலாய் கொண்டு
கலப்பையை கையில் ஏந்தி
காலத்துக்கும் வெயில் மழை பாரா
அனைவரின் பசிபோக்க அவனின்
பசி மறந்து உழைக்கும் விவசாயி
உழைப்பின் பலனாய் மகசூல்
காணும் போது தான் மனதோரம்
சின்ன சின்ன சந்தோசம்...

கெட்டி மேளம் கொட்டாத காலம்
கட்டிக்கொள்ள இதுவரை யாருமில்லை
வெட்டியாய் வாழ்ந்தே முடிப்பேனோ
என்று எண்ணியே நாளுமே
நரகமாய் தள்ளும் முதிர்கன்னி
திடீர் ஒருநாள் பெண்பார்க்க ஏற்பாடு
கனவுகளின் கருவுறுதல்
நினைவுகளில் சின்ன சின்ன சந்தோசம்...

எண்ணெய் தேய்க்கா தலை
அழுக்கு சீருடை அடிவாங்கியே
வேலை கற்கும் அழியாத கனவுகளோடு
வேலை முடித்து சோகமாய் திரும்பும்
மெக்கானிக் சிறுவன் அடைமழைக்காய்
ஒதுங்கிய பள்ளி நினைவுகள் அழகாய்
சின்ன சின்ன சந்தோசம்...

ஆம்
சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாம்
இருட்டு தேசத்தின் மின்மினி பூச்சிகள்
இன்றளவும் முன்னேறா வாழ்க்கை
முகம் தெரியா மின்மினிபூச்சிகளாய்
எம் சகோதர சகோதரிகள்..


ஜெ.தணிகைவாக்கில் இனிமை வேண்டும்

Wednesday, February 13, 2008

கழிப்பறையில் அவளுடன் சில நிமிடங்கள்

[அன்றாடம் நடக்கும் ஒரு கற்பணைக் கதை தான், ஆனால் பல இடங்களில் இதுபோல் நடப்பது உண்மை. வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். ]டர்ர்ர்ர்ர்ர்ர் டம் டம் டம் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "ஏம்மா ஓரமா போக கூடாதா" ஆட்டோக்காரன்"என்னங்க அவன், நாம ஓரமா தான் நடந்து போறோம்,, நம்மையே ஓரமா போக சொல்லுறானே.. கபோதி " மோகினி வெடித்தாள்"இந்த ஆட்டோகாரங்க தொல்லை தாங்க முடியல, ராஸ்கல்ஸ், நீ கோவிச்சிக்காத டியர். " தணிக் "ஏங்க இந்த சண்டே வெயில்ல டி.நகர் வரவேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களா ? ஒரே புகை, பெண்களை மட்டும் குறி வைத்து இடிக்கும் மனித உருவில் தடி மாடுங்க" பொறிந்தாள் மோகினி"சரி சரி ம்மா இந்த ஒரு முறை தானே, என் தங்கச்சி ஏதோ கேட்டுது அதை வாங்கி அனுப்ப தான் இப்ப வந்தோம், இனி எவன் வருவான் இங்க " மனைவிக்கு சப்போர்ட்டாக தணிக்"சரி சரி என்னத்த பண்றது , அடுத்து என்ன வாங்கனும் லிஸ்டல பாருங்க " மோகினி"டாப்ஸ், பேன்ட்ஸ் ..! " தணிக்"செல்லிக்கு போய்டலாமா..? " மோகினி"எனக்கு என்னம்மா தெரியும் எங்கே வேண்டுமானாலும் ஓகே தான்..!" தணிக்"என்னங்க வயித்தை கலக்குறா மாதிரி இருக்கு.. நாம் அப்பவே சொன்னேன் சரவண பவன்ல தயிர்சாதம் சாப்பிட மாட்டேன்னு கேட்டீங்களா..? " கோபத்துடன் மோகினி"சென்னையில சரவண பவன் தான் இருப்பதிலேயே டாப், வேற யாரிடமாவது சொல்லாத சிரிப்பாங்க.. ஹ ஹ ஹ " கிண்டலுடன் தணிக்"என்னங்க சரவணபவன் , நிம்மதியா உட்காந்து சாப்பிட முடியுதா..?சாப்பிட்டு முடிக்கும் முன்னாலேயே எப்படா காலி பண்ணுவோம்னு 4 பேர் நம்ம முன்னால வந்து நிக்குறாங்க ..அது கூட பரவாயில்லை.. அந்த ஆளு, அந்தாங்க அண்ணாச்சி மூனாவதா அந்த சின்ன பொண்ணை இழுத்துக்குனு ஓடினார்னு கேட்டதுக்குப் பிறகு நான் அங்க என்ன சாப்பிட்டாலும் வயத்தை கலக்குவது போலவேஇருக்குங்க.." நீண்ட லக்சர் வாசித்தாள் மோகினி."ஏம்மா அவர் இழுத்துகுனு ஓடினா நாம என்ன செய்ய முடியும்..? இந்த ஒரு இடம்தான் சாப்பிடும் படியா இருக்கு.." சமாளித்தான் தணிக்"என்னமோ போங்க, என்னை எதிர்த்து பேசுவதே உங்களுக்கு வழக்கமா போச்சு , லவ் பண்ணும் போது மட்டும் 1008 முறை உன்னை எதிர்த்தே பேச மாட்டேன்னு டயலாக் எல்லாம் சொன்னீங்க.. இப்ப அதெல்லாம் மறந்து போச்சா " பொங்கினாள் மோகினி"சரி சரி விடும்மா,, ஏன் பழைய கதை எல்லாம் இப்ப..? " வியர்வையை துடைத்துக் கொண்டே தணிக்"அத்தனை பேரு சாப்பிட வரோமே ஒரு நல்ல டாய்லட் வச்சிருக்கானா இந்த சரவண பவன்ல..இடியட்ஸ்..என்ன மயிருக்கு இது கேபிடல் சிட்டி.. ஒரு நல்ல டாய்லட் வசதி கூட இல்லாம ஷாப்பிங்க் காம்ளக்ஸ்...எவனப்பாரு லஞ்சம் வாங்கிகினு நோ அப்ஜக்சன் கொடுத்துடுறாங்க.. நம்மை மாதிரி மக்கள் தான் அவஸ்தைப் படுவது.. என்கிட்ட மட்டும் கன் இருந்தா இந்த கவர்ன்மட்ல வேலை செய்ற எல்லா ராஸ்கல்ஸையும் சுட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் " ஞாயமாகப் பேசினாள் மோகினி"சரிம்மா சரிம்மா சத்தாமா பேசாத நாம ஏதோ சண்டைப் போடுறோன்னு நினைச்சிக்கப் போறாங்க.." வியர்வை பொங்கியதை துடைத்துக் கொண்டே தணிக்"செல்லியில டாய்லட் சுமாரா இருக்குமாம் சீக்கிரம் வாங்க.." கோபத்துடன் சொன்னாள் மோகினி.செல்லியை அடைந்ததும், செக்யூரிட்டி பெண்ணிடம் டாய்லட்டை கேட்டு ஓடினாள் மோகினிபெண்கள் கழிப்பறையில் ஒரு நீண்ட வரிசையைக் கண்டதும் எரிமலையானாள் மோகினி..வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்.."ஏங்க என்ன ஆச்சு டாய்லட் ஏதாவது பிரச்சனையா..? ஏன் இத்தனை பேரு நிக்கிறாங்க க்யூவில " மோகினி சீரியஸாக."தெரியலைங்க ஏதோ பிளஷ் ஆக மாட்டேங்குதாம், உள்ளே ரிப்பேர் நடக்குது " அந்தப் பெண்"1000 கணக்கா பெண்கள் வந்து போகும் ஒரு இடத்தில இந்த மாதிரி டாய்லட் ரிப்பேர் ப்ளடி பாஸ்..." மோகினிவரிசையில் நின்றுக்கொண்டிருந்த சில பெண்கள் புலம்பிய படியே வெளியே சென்றார்கள்.."ஏம்மா என்னா ஆச்சு , ஏன் போறீங்க " மோகினி"என்னத்த பண்ண சொல்லுறீங்க.. இந்த நாட்ல பொம்பளையா பொறந்தது நம்ம தலை எழுத்து.. மூ... கூட அடக்கவேண்டியிருக்கு..எவன் தான் இதை எல்லாம் கேட்பானோ..?" அந்தப் பெண்மணி.சில நிமிடங்கள் கழிந்தன..பொறுமை இழந்த மோகினி, அங்கே அருகே நின்றுக்கொண்டிருந்த செக்யூரிட்டி பெண்ணிடம்"ஏம்மா இங்க முதலாளி யார்மா? வரசொல்லுமா இங்கே.. இத்தனைப் பெண்கள் இங்கே இவ்வளவு நேரமா நிக்கிறோம்.. ஒரு டாய்லட் சரியா இல்லாம என்ன மயிருக்கு கடையை திறந்து வச்சிருக்கீங்க..? கூப்பிடும்மா யாரு கடை முத்லாளி..?"வரிசையில் நின்ற பெண்கள் தங்களுக்காக பேச ஒரு தலைவர் இருப்பதை அறிந்தது சத்தாமாக பேச ஆரம்பித்தார்கள்..விசயம் தீவிரமாவதை உணர்ந்த செக்யூரிட்டி பெண்.. உள்ளே ஓடினாள்.."இவனுங்களுக்கு இதே பொழப்பு தான்.. டாய்லட் நல்லா இல்லைனா ஏன் கடையை திறக்கனும்.. பெண்களுக்கு எத்தனை அவஸ்தைகள் இருக்கு..எவனுக்காவது தெரியுதா..? " எல்லா பெண்களும்."ஏம்மா நீங்க எவ்ளோ நேரமா நிக்குறீங்க...?" முதலில் நின்ற பெண்மணியிடம் கேட்டாள் மோகினி"கால் மணி நேரமா.." அந்தப் பெண்மணி.."கால் மணி நேரமாவா..? இன்னுமா சரி செய்யல..? " மோகினி"ஆமாம்மா இப்ப முடிஞ்சிடும்னு சொன்னாங்க அதான் நிக்கிறோம் " அவர்கள்வெள்ளை நிற சட்டை..வேட்டி கட்டியிருந்த ஒருவர் ஓடி வந்து.. என்ன என்ன என்று கேட்டார்."ஏங்க இத்தனைப் பேரு கால்மணி நேரமா நிக்கிறோமே.. டாய்லட் என்ன ஆச்சு ?" மோகினி"ப்ள்ஷ் சரியா வேலை செய்யல,, தண்ணி வரலையாம்.. அது தான் பாக்குறாங்கல்ல.. என்ன இப்ப ?ஏன் கத்துறீங்க.." அவர்."யோவ் இன்னாயா கத்துறாங்க..? பொம்பளைங்களுக்கு எவ்வளவோ அவஸ்தை இருக்கும் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லனுமா ? " பெண்கள் மொத்தமா.."ஏம்மா ஏன் கத்துறீங்க அதான் சரி செய்றாங்கல்ல.." அவர்" இங்க பாருங்க.. நாங்க உடனே இப்ப டாய்லட்டை யூஸ் செய்து ஆகனும்... எப்படியாவது தண்ணிக்கு ஏற்பாடு பண்ணுங்க.. இல்லைனா டாய்லட் ரெடியாகும் வரை கடையை இழுத்து மூடுங்க.." மோகினி வீரமாக பேசினாள்."ஏம்மா கடையை மூட சொல்ல நீ யாரு..? டாய்லட் ரெடியாக இன்னும் 10 நிமிசம் ஆகும்..அவசர வற்ர வங்க பாண்டிபசார்ல இருக்குர கவர்மெண்ட் டாய்லட்டுக்கு போங்க.." அவர்"என்ன திமிரா பேசரான் பாத்தியா ராஸ்கல்.." பெண்களில் ஒருவர்.கைப்பையினுள் இருந்த மொபைல் போனை எடுத்து பேசினாள்.."ஏங்க எங்க இருக்கீங்க.." மோகினி"இங்கதாம்ம ரிசப்ஷன்ல உட்கார்ந்துக்கொண்டி இருக்கேன்.. ஏன் லேட்டு சீக்கிரம் வா.." திணக்."நீங்க முதல்ல 2 வது ப்ளோருக்கு வாங்க..உடனே " மோகினி போனை துண்டித்தாள்..திணக் வேகமாக 2வது ப்ளோரை தேடி ஓடினான்."ஏம்மா என்னா ஆச்சு.. ஏன் இவ்ளோ பெரிய கூட்டம்.. நீ போகல இன்னும்.. அவசரம்னு சொன்னியே.." திணக் அவசர அவசரமாக கேட்டான்."இங்க லேடிசூக்கு தண்ணி ஏற்பாடு செய்ய மாட்டாராம்...அந்த கேமராவை எடுங்க.." கோபமாக மோகினி.பையினுள் இருந்த டிஜிட்டல் கேமராவை எடுத்து அங்கே நடப்பதை ஷீட் செய்ய ஆரம்பித்தாள்"ஏம்மா என்ன செய்றீங்க.. எங்க கேமரா எல்லாம் யூஸ் செய்ய கூடாது.."அவர் அவச்ரமாக.."யோவ் சீக்கிரம் தண்ணிய ஏற்பாடு பண்ணுங்க.. உங்களுக்கு கோர்ட் கேஸூன்னு அலையனுமா..? அந்தம்மா யார் தெரியுமா.. ஹிண்டு ரிப்போர்டர்யா.. உங்க கடை லட்சனம் இந்தியா முழுவதும் நாறிடும்.." அந்த இடத்தில சரியாக பேசினான் தணிக்.."சாரிம்மா.. சாரிம்மா.. நாம் இப்பவே.. தண்ணி ஏற்பாடு செய்றேன்.. அந்த கேமராவை முதல்ல ஆஃப் செய்யுங்க.." கெஞ்சினார் அவர்."யோவ் ரிப்பேர் செய்தது போதும் வாங்கையா வெளியே.." அவர்அங்கே நின்றுக்கொண்டிருந்த செக்யூரிட்டிப் பெண்களை பாத்து.."ஏம்மா சீக்கிரம்.. 10 பேரை கூட்டி முதல் ப்ளோரிலிருந்து இங்க தண்ணிக்கு ஏற்பாடு செய்யுங்க..சீக்கிரம்..சீக்கிரம்.. " தடுமாறி அவர்."ஏம்மா உனக்கு வயத்து வலி எப்படி இருக்கு." தணிக் பாசத்துடன்."சரி ஆகிவிட்டது.. வாங்க போகலாம்.." மோகினி.-- முனீஸ்[நான் அவனில்லை]

ஆசை

வேலையில் இருந்து
வீடு வந்த சிரேயா வாசலில் ஜேகேயின்
காலணி இருப்பதை பார்த்ததும் சந்தோஷத்தின் எல்லைக்கே
போய் விட்டாள்.

ஜேகே அவளின் மாமன் மகன். ஜேகே என்றால் அவளுக்கு உயிர்.
ஜேகே என்றால் நன்றாக பிடிக்கும். ஆனால் அவனுடன் கதைப்பதற்க்குதான்
அவளுக்கு சந்தப்பம் இருந்ததில்லை.

இன்று எப்படியாவது கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். வீடெங்கும்
அவனை தேடினாள் காணவில்லை. அவன் பின்புற தோட்டத்தில் நிக்கிறான் போலும்.இவள்
கண்ணாடியில் முகம் பார்த்தாள். இப்படியே போவது சரியில்லை என பட்டது. குளித்து
உடை மாற்றி விட்டு இவள் வரவும் ஜேகே வரவும் சரியாக இருந்தது. ஜேகே இவளைக்
கண்டதும் வெட்கப்பட்டான். இவள் அருகில் சென்றதும் விலக முயன்றவனை எட்டி
கையில் பிடித்து அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள்



ம்ம்ம்...... நீங்க நேசரியில சொல்லிக் கொடுக்கிற
பாட்டு நல்லா பாடுவிங்கலாமே.எனக்கு
ஒரு முறை பாடிக் காட்டுங்களேன் என
கொஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த மூன்று
வயது ஜேகேயிடம்