இனிக்க இனிக்க
தினமும் பேசும்
கண்ணியமான நாம்
இனிய காதல்ஜோடி
இருவரும் இருவருடம்
ஒருவரை ஒருவர் நேரில்
காணாமல் காதலித்த
காலங்கள் இனிமையானவை
இன்று நேரில் சந்திக்கையில்
கன்றை இழந்த தாய்ப்பசு
மறுபடி அதை சந்திக்கையில்
கொள்ளும் சந்தோசத்தை
நான் அடைந்த போதிலும்
தொடமுடியாமல் தடுத்தன
கண்ணியமான நம் காதல்
கையில் மலர்ச்செண்டோடும்
நெஞ்சில் காதலோடும்
என் முன்னே தோன்றிய உனை
கண்டதும் என் கண்கள்
காதலால் கண்ணீர் வடித்தன
வடிந்த கண்ணீரை
துடைத்திட எழுந்த கைகள்
ஏனோ பின் தயங்கின
கண்ணியமான காதலால்
மறுநிமிடம்.....
பூந்தோட்டத்தில் இருந்த நம்மை
மாந்தோப்பில் குலவிய இருகிளிகள்
எம் உதட்டையும் குவிய வைத்து
கண்ணியமான காதலை தோற்கடித்தது

No comments:
Post a Comment