Wednesday, February 13, 2008

ஆசை

வேலையில் இருந்து
வீடு வந்த சிரேயா வாசலில் ஜேகேயின்
காலணி இருப்பதை பார்த்ததும் சந்தோஷத்தின் எல்லைக்கே
போய் விட்டாள்.

ஜேகே அவளின் மாமன் மகன். ஜேகே என்றால் அவளுக்கு உயிர்.
ஜேகே என்றால் நன்றாக பிடிக்கும். ஆனால் அவனுடன் கதைப்பதற்க்குதான்
அவளுக்கு சந்தப்பம் இருந்ததில்லை.

இன்று எப்படியாவது கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். வீடெங்கும்
அவனை தேடினாள் காணவில்லை. அவன் பின்புற தோட்டத்தில் நிக்கிறான் போலும்.இவள்
கண்ணாடியில் முகம் பார்த்தாள். இப்படியே போவது சரியில்லை என பட்டது. குளித்து
உடை மாற்றி விட்டு இவள் வரவும் ஜேகே வரவும் சரியாக இருந்தது. ஜேகே இவளைக்
கண்டதும் வெட்கப்பட்டான். இவள் அருகில் சென்றதும் விலக முயன்றவனை எட்டி
கையில் பிடித்து அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள்



ம்ம்ம்...... நீங்க நேசரியில சொல்லிக் கொடுக்கிற
பாட்டு நல்லா பாடுவிங்கலாமே.எனக்கு
ஒரு முறை பாடிக் காட்டுங்களேன் என
கொஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த மூன்று
வயது ஜேகேயிடம்

No comments: