ஜேகேயும் அனிதாவும் உயிர் நபர்கள். இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம் இருந்தபோதும் அன்புகாட்டிக் கொள்வதில் வித்தியாசம் இருந்ததில்லை.
அனிதா கல்வி கற்றுக் கொண்டிருந்தாள்; ஜேகே தனியார் கம்பனி ஒன்றில் நல்ல வேலையில் இருந்தான். அதனால் அனிதாவின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஜேகே பூர்த்தி செய்து வந்தான்.
அனிதா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நட்பில் கோடிஸ்வரியாக இருந்தாள்.
இவர்களின் அன்னியோன்யத்தை பார்த்து பொறாமைப்பட்ட ஜேகேயின் நன்பர்கள்'உன் நட்பை உறுதி செய்ய நீ அவளிடம் ஜ லவ் யூ சொல்ல வேண்டும். அதனை அவள் ஏற்றுக் கொண்டால் உன் நட்பு பொய் என்றும் ஏற்காவிட்டால் உன் நட்பு உண்மை என்றும் ஏற்றுக் கொள்வதாய் சவால் விட்டார்கள். சவாலை சமாளிப்பதில் ஆர்வம் கொண்ட ஜேகே அனிதாவிடம் ஜ லவ் யூ சொல்ல தயாரானான்.
அன்றும் வழமைபோல பாடசாலை விட்டு வந்து கொண்டிருந்த அனிதாவை அழைத்து பேச ஆரம்பித்தான்."அனி.... என்மனசில உள்ளத நா சொல்லலாம்னு நினைக்கிறேன்.ஜ லவ் யூ அனி. நீ எனக்கு வேணும்டா....... "சொல்லி முடிப்பதற்குள் அனிதா அவன் கைகளை உதறிவிட்டு" ஜே நீ இவ்வளவு கேவலமானவனா இருப்பன்னு நா நினைக்கவே இல்ல.என் நட்ப நீ தப்பா புரிந்துகிட்டு இவ்வளவு நாள் என்னை ஏமாற்றியிருக்கா.இனி நா ஏமாறமாட்டேன் குட்பாய் ஜேகே என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களால் வார்த்தைகளை இதயத்தில் இரைத்து விட்டு ஓடி மறைந்தாள்.
தன் நட்பு உண்மையானது என நிருபித்த போதும் நண்பியை பிரிந்து வாடினான். அதன் பின் நடந்த சம்பவத்தை விளக்க பல தடவைகள் ஜேகே முயன்ற பொழுதும் அனிதா ஜேகேயை சந்திப்பதை தவிர்த்தாள். தன்னையும் தன் மனதையும் என்றாவது புரிந்துகொள்வாள் என்ற எதிர்பார்ப்பில் இன்னும் ஜேகே அனிதாவிற்காக காத்திருக்கிறான்....
அனிதா கல்வி கற்றுக் கொண்டிருந்தாள்; ஜேகே தனியார் கம்பனி ஒன்றில் நல்ல வேலையில் இருந்தான். அதனால் அனிதாவின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஜேகே பூர்த்தி செய்து வந்தான்.
அனிதா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நட்பில் கோடிஸ்வரியாக இருந்தாள்.
இவர்களின் அன்னியோன்யத்தை பார்த்து பொறாமைப்பட்ட ஜேகேயின் நன்பர்கள்'உன் நட்பை உறுதி செய்ய நீ அவளிடம் ஜ லவ் யூ சொல்ல வேண்டும். அதனை அவள் ஏற்றுக் கொண்டால் உன் நட்பு பொய் என்றும் ஏற்காவிட்டால் உன் நட்பு உண்மை என்றும் ஏற்றுக் கொள்வதாய் சவால் விட்டார்கள். சவாலை சமாளிப்பதில் ஆர்வம் கொண்ட ஜேகே அனிதாவிடம் ஜ லவ் யூ சொல்ல தயாரானான்.
அன்றும் வழமைபோல பாடசாலை விட்டு வந்து கொண்டிருந்த அனிதாவை அழைத்து பேச ஆரம்பித்தான்."அனி.... என்மனசில உள்ளத நா சொல்லலாம்னு நினைக்கிறேன்.ஜ லவ் யூ அனி. நீ எனக்கு வேணும்டா....... "சொல்லி முடிப்பதற்குள் அனிதா அவன் கைகளை உதறிவிட்டு" ஜே நீ இவ்வளவு கேவலமானவனா இருப்பன்னு நா நினைக்கவே இல்ல.என் நட்ப நீ தப்பா புரிந்துகிட்டு இவ்வளவு நாள் என்னை ஏமாற்றியிருக்கா.இனி நா ஏமாறமாட்டேன் குட்பாய் ஜேகே என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களால் வார்த்தைகளை இதயத்தில் இரைத்து விட்டு ஓடி மறைந்தாள்.
தன் நட்பு உண்மையானது என நிருபித்த போதும் நண்பியை பிரிந்து வாடினான். அதன் பின் நடந்த சம்பவத்தை விளக்க பல தடவைகள் ஜேகே முயன்ற பொழுதும் அனிதா ஜேகேயை சந்திப்பதை தவிர்த்தாள். தன்னையும் தன் மனதையும் என்றாவது புரிந்துகொள்வாள் என்ற எதிர்பார்ப்பில் இன்னும் ஜேகே அனிதாவிற்காக காத்திருக்கிறான்....


No comments:
Post a Comment