Wednesday, August 20, 2008

கல்லூரி நினைவுகள்....

கல்லூரி நினைவுகள்....

கல்லூரி நினைவுகள் இன்று
என்னுள்ளே எட்டி பார்க்கின்றன
படிக்கவென வரும் சிலரும் பெண்களை
ரசிக்கவென இன்னும் சிலரும்
பெற்றோரின் இம்சையால் மற்றும் சிலர்

கடைசி வாங்கில் இருந்து அரட்டை அடிக்கும் நண்பரும்
காதல் கடிதம் எழுதும் சில பின்ச்சில் பழுத்தவரும்
பிரின்சியை பற்றி கதை பரப்பும் ஓரிருவர்

சங்கீத மிச்சின் கதையும் சிரிப்பும் அதை நாம் பார்த்து
சிரிக்க அவர் கூறும் வார்தைகளும்
பொம்பிளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
இன்னும் அது யாதென புரியாமல் போச்சு!

மாடியில் நின்று கீழ் வருபவர்களை பார்ப்பதும்
தேவாரம் படிக்கும் போது சிரித்து பிரின்சியிடம்
மொத்த தடியால் அடி வாங்கினதும் அதை பார்த்து
சிரித்த இன்னும் சிலரும்

தலையிடி காய்ச்சல் என்றால் நமக்கு மருந்து தேடி
அலையும் இன்னும் சில நல்ல உள்ளங்களும்
கொண்டு வந்த சாப்பாட்டை பிரித்து எல்லோரும்
சாப்பிடுவதும் போதாவிடில் கன்டினிக்கு ஓடுவதும்

திருக்குறல் மனப்பாடம் செய்துகொண்ட நண்பரும்
பொறுப்பற்று முழிக்கும் என் போன்ற மாணவர்கள்
புத்தகமே கண் என இருக்கும் சிலர் அதை ஆமோதிக்கும்
தமிழ் ஆசிரியை நம்மை ஏதேதோ சொல்லி திட்டும் நாட்கள்
புலித்தோல் போர்த்த பசுக்கலாம் நாம்!

இப்படி எத்தனையோ நினைவலைகள் என்றும்
என்னுள்ளே பசுமையாக வந்து போகும்
அக் காலம் பொற்காலம் தான் - மீண்டும் வராதோ
என ஏங்கும் நம் நண்பர் கூட்டம்

No comments: