வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
******
ஒரு வாத்தியார் பையன் கிட்ட "மூன்று அழகிகள் நடந்து போகிறார்கள் ஆச்சர்ய வாக்கியமா மாத்து"
பையன் "வாவ்!"
******
ஒரு வயதான ஆள் பாவ மன்னிப்பு கேட்க வந்திருந்தார்
"இரண்டாம் உலகப்போர் சமயத்தில் என் வீட்டில் ஒளிந்து கொள்ள ஒரு அழகி வந்தாள் நான் அடைக்கலம் தந்தேன்"
"அது நல்ல விஷயம் தானே"
"ஆனால் நாளாக நாளாக நாங்கள் தவறு செய்து விட்டோம்"
"அது தவறு என உணர்ந்தாயே உன் குற்றம் மன்னிக்கப்பட்டது"
"நன்றி ஃபாதர், அது தான் என் மனதை இவ்வளவு நாள் உறுத்தியது"
"கடைசியாக ஒன்று கேட்க வேண்டும்"
"கேள் மகனே"
"இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டதை நான் அவளிடம் நிச்சயம் சொல்ல வேண்டுமா?"
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment